ஜூலை மாதம் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நலத்திட்ட உதவிகளை அரசு நேரடியாக வரவு வைக்கும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதம் முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தேவையான நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படுவதை நலன்புரி நன்மைகள் சபை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.