Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைமறுதினம் (மார்ச் 25) நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இந்தப் பரீட்சை நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக குறித்த தினத்தில் பரீட்சை நடைபெற மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு அமையாக இப்பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular