கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 17) நிறைவடைந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2023 ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜயசுந்தர, உயர்தரப் பரீட்சை விடைத்தால் திருத்தப் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காததால் கவலைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தப் பணிக்காக வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
தற்போது வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவான 500 ரூபாய் போதாது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கிடையில், விடைத்தாள் திருத்தப் பணிக்கான ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை 3,000 ரூபாயாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.