Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்கோப்பாயில் இருவேறு வீடுகளில் நகைகள் திருட்டு; பெண் உள்பட மூவர் கைது

கோப்பாயில் இருவேறு வீடுகளில் நகைகள் திருட்டு; பெண் உள்பட மூவர் கைது

இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக பெண் உள்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவில்
அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை களவெடுத்தமை மற்றொரு வீட்டில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முதன்மை சந்தேகநபரான திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular