கொக்குவில் – தாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டுமடத்தைச் அனோஜன் (வயது -19) என்ற இளைஞனே யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த ரகுசன் (வயது-17) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் தாவடி பகுதியில் பயணித்த வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரே படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.