Sunday, May 28, 2023
Homeஅரசியல்தொலவத்த எம்.பி கொண்டு வந்த சட்டவரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

தொலவத்த எம்.பி கொண்டு வந்த சட்டவரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்தவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டவரைவு அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே. அதுல எச் டி சில்வா, ஷெனாலி டி வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோர் இந்த மனுவின் மனுதாரர்களாக உள்ளனர்.

பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழிவாக முன்வைக்கப்பட்ட தொடர்புடைய சட்டவரைவின் ஊடாக பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த ஓரினச்சேர்க்கையை குற்றமற்ற குற்றமாக விளக்க முயற்சித்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தண்டனைச் சட்டம் தொடர்பான சட்டமன்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பு விதிகள் கடுமையாக மீறப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத நம்பிக்கைகளின்படி கூட, ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், எனவே உத்தேச சட்டவரைவின் விதிகள் அந்த மத நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், குறித்த சட்டவரைவினால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் இந்த நாட்டின் கலாசார மற்றும் தேசிய அடையாளங்களுக்கு எதிரானவை எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்டவரைவில் உள்ள விதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இருப்பதால், அதை நிறைவேற்ற வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular