92 பெற்றோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 400 ரூபாயாகும்.
ஏனைய எரிபொருள்களின் விலையில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசியும் நள்ளிரவு முதல் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலையை 400 ரூபாயாக அதிகரித்துள்ளது.
