Bharti Airtel Lanka (Pvt) Ltd (பாரதி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிட்டட்) இலங்கையில் தனது நடவடிக்கைகளை Dialog Asiata PLC (டயலொக்) நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் டயலொக் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு அறிவித்துள்ளார்.
உத்தேச உடன்படிக்கை மற்றும் பொருத்தமான ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல்கள் உட்பட தேவையான இறுதி நிபந்தனைகள் கையெழுத்திடப்படுவதற்கு உட்பட்டது என்று அவர் கொழும்பு பங்குச் சந்தைக்கு மேலும் தெரிவித்தார்.