Friday, September 22, 2023
Homeஅரசியல்பெற்றோலின் விலை 20 ரூபாவினால் உயர்வு

பெற்றோலின் விலை 20 ரூபாவினால் உயர்வு

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாயினால் அதிகரிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 348 ரூபாயாகும்.

95 ஒக்ரகைன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைந்து 375 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாயினால் அதிகரித்து 348 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாயினால் குறைந்து 306 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைந்து 236 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular