எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.
அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 4 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 351 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரித்து 421 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை லீற்றர் ஒன்றுக்கு 11 ரூபாயினால் அதிகரித்து 242 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
