எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (நவம்பர் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 9 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை லீற்றர் ஒன்று 356 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 423 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 431 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெயின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை லீற்றர் ஒன்று 356 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.