Friday, September 22, 2023
Homeஅரசியல்மருத்துவ வல்லுநர்களின் வெளிநாடு செல்வதற்கான விடுப்புக்கு அனுமதி இல்லை

மருத்துவ வல்லுநர்களின் வெளிநாடு செல்வதற்கான விடுப்புக்கு அனுமதி இல்லை

மயக்கவியல் வல்லுநர்கள் உட்பட தற்போது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவ வல்லுநர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்திற்கான விடுமுறையை அனுமதிப்பதில்லை என்று சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள பல பகுதிகள் தற்போது இனங்காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் செயலாளர் செயலாளர், மருத்துவர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த

அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றால் அவர்களை பணி நீக்கம் செய்து தேவையான மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

யநாட்டில் குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான மருத்துவ வல்லுநர்களின் புலம்பெயர்வினால் இந்த நாட்டில் சுகாதார சேவையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டன.

600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிறப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் சுமார் 300 பேர் இந்த ஆண்டு நாடு திரும்பவுள்ளனர்.

அவர்களின் வருகையின் பின்னர் தற்போது ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மே 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலப்பகுதியில் 274 மருத்துவ வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் 842 தரவரிசை மருத்துவ அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular