இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான ஒழுங்குமுறைகளை தயாரிப்பதற்காக சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குழு ஏற்கனவே இது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் காரணமாக மின்சார வாகனங்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.