Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்.பல்கலை. துணைவேந்தராக இரண்டாவது முறையாக பேரா. சிறிசற்குணராஜா நியமனம்

யாழ்.பல்கலை. துணைவேந்தராக இரண்டாவது முறையாக பேரா. சிறிசற்குணராஜா நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியில் நீடிப்பார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular