யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமற்போயுள்ளார்.
மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் அவரது அலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் வந்துள்ளனர்.
விடுதியில் பெற்றோர் விசாரித்த போது , மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.