Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்.போதனா மருத்துவமனையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் மீள ஆரம்பம்

யாழ்.போதனா மருத்துவமனையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் நாளை (ஜூன் 23) வெள்ளிக்கிழமை முதல் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

விழித்திரை சத்திர சிகிச்சையானது சத்திர சிகிச்சை வல்லுநர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. 

இந்த நிலையில் தற்பொழுது விழித்திரை சத்திர சிகிச்சை மருத்துவ வல்லுநர் ஷைலா பரதன் பதில் கடமையேற்றுள்ளார். 

அவர் தமது சேவையினை மக்களுக்கு வழங்கும் முகமாக வாரத்துக்கு ஒருமுறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை நாளை முதல் மேற்கொள்ள உள்ளார். 

ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந்த நிகழ்ச்சித்திட்டமானது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular