Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் பலத்த காற்று; கனமழை

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பலத்த காற்று; கனமழை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 180 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கையின் கிழக்கு கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய இடங்களில் மணிக்கு 40-50கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular