Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வவுனியா பல்கலை. நீர்க்குழியில் வீழ்ந்து பாடசாலை மாணவர்கள் இருவர் சாவு; சம்பவத்தையடுத்து துணைவேந்தர் மீது தாக்குதல்

வவுனியா பல்கலை. நீர்க்குழியில் வீழ்ந்து பாடசாலை மாணவர்கள் இருவர் சாவு; சம்பவத்தையடுத்து துணைவேந்தர் மீது தாக்குதல்

வவுனியா கல்வி வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற நிலையில் நீர்குழியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் பயிலும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் இருவரே உயிரிழந்தனர்.

வவுனியா கல்வி வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு நாள்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மைதானத்தில் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இடம்பெற்றபோது மைதானத்தின் அருகில் காணப்பட்ட நீர்குழியில் மாணவர்கள் இருவர் தவறுதலாக வீழ்ந்துள்ளனர்.

மாணவர்கள் வீழ்ந்ததை அவதானித்தவர்கள் கடமை இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தினர். பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன் இணைந்து மாணவர்களை மீட்டனர்.

மாணவர்கள் இருவரும் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் குவிந்திருத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக வெளியேறிச் சென்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular