சினோபெக், யுனைடெட் பெற்றோலியம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு Shell Plc உடன் இணைந்து இலங்கையில் எரிபொருளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தகவலை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் 3 நிறுவனங்களுக்கு செயல்பட உரிமம் வழங்க தங்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளன.
3 நிறுவனங்களுக்கும் இலங்கை பெறோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இயக்கப்படும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.